கிழக்கு மாகாண முன்னாள் முதல்வரும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் களமிறங்கியுள்ள வேட்பாளருமாகிய நஜீப் அப்துல் மஜித் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கிண்ணியா பிரதேச செயலக அலுவலகத்தில் தபால் மூல வாக்களிப்பு இடம்பெற்ற போது அங்கு அத்துமீறி நுழைந்ததாக கூறியே இவர் கைதாகியுள்ளார்.
மேலும் இவருடன் மற்றுமொரு ஆதரவாளரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை திருகோணமலை நீதிமன்றத்தில் இவர்கள் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
வியாழன், 6 ஆகஸ்ட், 2015
Home »
» கிழக்கு முன்னாள் முதல்வர் கைது செய்யப்பட்டு பினையில் விடுதலை
0 facebook-blogger:
கருத்துரையிடுக